“அட கடவுளே என்ன இது…? சுற்றுலாப் பயணிகளின் அலட்சியம்… பீர் பாட்டில்களைக் கடித்துக் குதறும் குரங்குகள்… சமூக வலைதளங்களில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

Spread the love

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில் உள்ள ஒரு கடற்கரையில், குரங்குகள் மனிதர்களைப் போல பீர் பாட்டில்களைக் கையில் வைத்துள்ள விசித்திரமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் குரங்குகள், கடற்கரையில் உள்ள பீர் பாட்டில்களைக் கையாளுவது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இரண்டு குரங்குகள் கடற்கரை மணலில் அமர்ந்து பீர் பாட்டில்களைத் திறந்து குடிக்க முயற்சிப்பதைக் காண முடிகிறது. அதில் ஒரு குரங்கு பாட்டிலை வாயில் வைத்து உறிஞ்ச முயல்கிறது, மற்றொரு குரங்கு பாட்டிலின் மூடியைக் கடிக்க முயல்கிறது. இந்த குரங்குகள் ‘ஹேப்பி ஹவர்ஸ்’ கொண்டாட வந்துவிட்டனவா என்று நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பீர் பாட்டில்களையும் குப்பைகளையும் கடற்கரையிலேயே வீசிச் செல்வதால் தான் வனவிலங்குகள் இது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகின்றன என்றும், இது அவற்றின் ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

11 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

15 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

26 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

33 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

47 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

49 minutes ago