தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக, 2027ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்களை மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு பெறத் தொடங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் மூலம் இந்த விண்ணப்பச் செயல்முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்யேக செயலி வழியாகவோ எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.
ஹஜ் 2027 பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 22.06.2026 முதல் 20.07.2026 (இரவு 11.59 மணி வரை) இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https//hajcommittee.gov.in வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது “HAJ SUVIDHA” என்ற மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்தும் பூர்த்தி செய்யலாம். இந்த விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்பதுடன், விண்ணப்பதாரர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய ஹஜ் குழுவின் மூலம் இப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்ற முக்கிய விதியும் நடைமுறையில் உள்ளது.
விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதியை உறுதி செய்து, பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் பிரதிகளை (புகைப்படங்கள் அல்ல) சரியாகப் பதிவேற்ற வேண்டும்:
இப்பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகள், தங்களின் முதல் தவணைத் தொகையாக ரூ. 1,52,300/- செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். மேலும், ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 20.07.2026 ஆகும். மரணம் அல்லது கடுமையான மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களின் முழுமையான உடல் மற்றும் நிதித் தயார்நிலையைச் சிந்தித்து, உறுதியான முடிவோடு விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…