வரும் 15-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2500..? வெளியான மகிழ்ச்சியான தகவல்…!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரும் 15-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான புதிய அரசு, முந்தைய அரசின் இந்த முக்கியத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி இந்தத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால், அது புதிய அரசின் முதல் பெரிய சாதனையாகக் கருதப்படும்.