தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு ‘தனிநபர் கடன் திட்டம்’ மூலம் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்களுக்கு ஆண்டுக்கு 7% முதல் 8% வரையிலான மிகக் குறைந்த வட்டியில், அதிகபட்சமாக ரூ 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ5,00,000-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பெண்கள் தங்களின் சுய தொழில் கனவை நனவாக்கிக் கொள்ளுமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள பெண்கள் www.tabcedco.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களின் விண்ணப்பங்களை உடனே சமர்ப்பிக்கலாம். சுய தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், உங்களது தோழிகள் மற்றும் தெரிந்த மற்ற பெண்களுக்கும் இந்தத் தகவலை உடனே SHARE செய்து அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.
