“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

By Visaka on ஆடி 1, 2026

Spread the love

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், ஜூலை 1ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படியே அவர் இன்று விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் நேன்றாக ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தன் மீதான புகார்களை முற்றிலும் மறுத்துள்ளார். போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்து தாம் யாரிடமும் எந்தவிதப் பணமும் பெறவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவருக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், கைது செய்யப்பட்ட நபருடன் தாம் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அவர், “அந்தத் தொலைபேசி உரையாடலில் உள்ள குரலையும், எனது உண்மையான குரலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் குரல் சோதனைக்கு நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன்” என்று சவால் விடுத்துள்ளார். தான் அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில், தினந்தோறும் 200 முதல் 300 பேர் வரை தன்னை நேரில் வந்து சந்திப்பது வழக்கம் என்றும், அவ்வாறு வந்து சென்றவர்களை எல்லாம் இந்த விவகாரத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது முறையல்ல என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.