ஆன்மீக சாராம்சம் மற்றும் பெரும் கூட்டத்திற்கு பெயர் பெற்ற பிரயாக்ராஜில் நடைபெறும் மஹாகும்பமேளாவில் சமீபத்தில் ஒரு ஊசிமணி விற்கும் பெண் தனது அழகிய கண்களால் வைரலாகி விட்டார். பக்தர்கள் “தங்கள் பாவங்களைக் கழுவ” கூடும் திரிவேணி சங்கமத்தில் உள்ள புனிதமான சூழ்நிலையில், இந்தூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் எதிர்பாராத விதமாக சமூக ஊடகங்களில் வைரலானார். இதுவரை சுமார் 8.81 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து புனித நீராடியுள்ளனர். இந்த வருடம் மொத்தமாக 40 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான் இப்பெண் வைரலாகிவிட்டார். அவரது அம்பர் நிற கண்கள், அடர் நிறம் மற்றும் தனித்துவமான பேச்சு முறை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகிவிட்டன. அவரது பெயர் மோனாலிசா என்பது இணையவாசிகளை, பெரும்பாலும் ஆண்களை அவர் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
சிலர் அவரது “இயற்கை அழகை” கொண்டாடிய அதே வேளையில், ஆண் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் புனித நிகழ்வை அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மாற்றியதை பலரும் விமர்சித்தார்கள். திரைபட நடிகைகளை போன்று இல்லாமல் எதார்த்தமான அழகோடு மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது.
இந்த நிலையில் 16 வயது பெண் மோனாலிசா போஸ்லே பாலிவுட் இயக்குனர் மனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் தயாராகும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கும்பமேளாவில் ருத்ராட்சை உள்ளிட்ட பொருட்களை விற்று வந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…