அடுத்த பரபரப்பு..! பாமகவிலிருந்து விலகுகிறார் எம்.எல்.ஏ அருள்… அதிர்ச்சியில் ராமதாஸ்..!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் இணைந்து கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவால் பாமக தரப்பில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாமக எம்.எல்.ஏ அருள் இந்தக் கூட்டணியில் உடன்பாடு இல்லாததால், நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பின்போது அவர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிருப்தியின் காரணமாக, எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் பாமகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் இந்தத் திடீர் முடிவு மற்றும் மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி காரணமாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருளின் இந்த விலகல் முடிவு பாமகவிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.