வறுமையில்லாத மாநிலமாக சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அயோத்தியின் பெருமையை சொல்லும் போது கூட காவிரி நாட்டுடன் ஒப்பிட்டவர் கம்பர். ராமனை அவதாரமாக காட்டுவது வால்மிகியின் பார்வை. நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான். அதுபோல வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான் என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியுள்ளார்.
வன்மையில்லை ஒரு வறுமை இன்மையால் என்று கம்பர் கூறினார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் என்று மாறியுள்ளது. சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்கின்றது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. இதுதான் கம்பர் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொன்றுதான் என்ற முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
