“சட்டசபைக்கு வர ஆசைப்பட்டார்.. ஆனா மக்கள்?”…. சீமான் பற்றி வெளிவந்த பகீர் உண்மை… அமைச்சர் வன்னி அரசு பரபரப்பு பேட்டி….!

Spread the love

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளிலுமே இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக விவரித்துள்ளார். அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்; இரண்டு கட்சிகளுமே இடைநிலைச் சாதிகளின் பிடியில் சிக்கியுள்ளன” எனக் குற்றம் சாட்டினார். மேலும், கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் சட்டை கிழிக்கப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்த அவர், தற்போது பேரவையின் செயல்பாடு அமைதியாக இருப்பதையும், சமூக நீதித்துறை மாற்றத்திற்கான பின்னணி குறித்து ஏற்கனவே பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், புதிய தலைமைச் செயலக சர்ச்சை குறித்து முதலமைச்சரே உரிய முடிவை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை இலக்கு என்றும், விசிக இருக்கும் அணியே உண்மையான இடதுசாரி மற்றும் பாஜக எதிர்ப்பு அணியாகத் திகழும் என்றும் வன்னி அரசு உறுதியாகத் தெரிவித்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கடுமையாக விமர்சித்த அவர், “சினிமாவிலிருந்து வந்து சட்டமன்றத்திற்குள் நுழைய ஆசைப்பட்ட சீமானை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பும் செய்யாமல், மக்களிடையே வெறுப்பு அரசியலை விதைத்து தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்” என்று சாடினார்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… இதை யாரும் எதிர்பார்க்கல… கணபதி பாப்பாவுக்கு முஸ்லிம் பெண் செய்த காரியம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஒரு முஸ்லிம் பெண் கணபதி பாப்பா மீது காட்டும் பேரன்பைக் கண்டு சிலர் வியப்படையலாம். ஆனால், நமது இந்தியாவின் உண்மையான…

9 minutes ago

நீ செஞ்ச பாவமடா… மாற்றுத்திறனாளி மகனைத் தாங்கும்… பெற்றோருக்கு இணையவாசிகளின் பேரதிர்ச்சி சாபம்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

ஒரு தாயின் அன்பையும் தந்தையின் அரவணைப்பையும் எந்தப் பணத்தாலும் வாங்க முடியாது என்பதற்கு இந்தக் குடும்பமே மிகச்சிறந்த சான்று. பிறப்பிலிருந்தே…

14 minutes ago

என்னடா கொடுமை இது… எம்.பி மகன்னா ஒரு சட்டம்?… சாதாரண ஏழைனா ஒரு சட்டம்?… காவல்துறையின் முகத்திரையைக் கிழித்த நெட்டிசன்கள்… தெலங்கானாவில் பரபரப்பு…!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில், அரசுப் பேருந்து மோதி ஹேமதுர்கா என்ற 26 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில்…

25 minutes ago

“எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டிய அதிநவீன கார்… ஆனால் உள்ளே இருந்தது யார்…?” புனே போலீசாரின் அதிரடி சோதனையில் அம்பலமான உண்மை… வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…

34 minutes ago

அடேங்கப்பா… 48 கிலோ தங்கம்?… 3.8 லட்சம் வைரம்…? ஹைதராபாத்தை அலறவிட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஷாக்கில் நெட்டிசென்கள்…!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…

35 minutes ago