“வீடு புகுந்து தாக்குதல்?.. அமைச்சர் செய்த காரியம்”… நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன…?

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் புதுச்சேரி அமைச்சர் மரியவில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் தனது சொந்த சகோதரரின் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கியதாக அமைச்சர் மரியவில்சன் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைக் கண்டிக்கும் வகையில், வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையின் போது அவர் எவ்வித காரணமுமின்றி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தற்போது திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.