தலைமைச் செயலகத்தில் திடீரென பதறிய அன்புமணி ராமதாஸ்.. அமைச்சர் ஆனந்த் செய்த ‘அந்த’ காரியம்… அதிர்ச்சி திருப்பம்…..!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜய்க்கு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கணேஷ்குமார் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருந்தனர்.

அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகத்திற்கு வருவதை முன்கூட்டியே அறிந்த அமைச்சர் ஆனந்த், மரபுகளைத் தாண்டி நேசத்துடன் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார். அமைச்சரின் இந்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு வியந்த அன்புமணி, “நாங்களே உள்ளே வந்திருப்போமே, நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என நெகிழ்ச்சியுடன் கேட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சரின் அறைக்குச் சென்ற அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, பரஸ்பரம் வாழ்த்துகளையும் மரியாதையையும் பரிமாறிக் கொண்டனர்.

   

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அமைச்சர் ஆனந்த் தனது அதிகாரபூர்வ அமைச்சர் நாற்காலியில் அமராமல், அன்புமணிக்கு அருகில் இருந்த சாதாரண நாற்காலியில் அமர்ந்தார். இதைப் பார்த்துத் திடுக்கிட்ட அன்புமணி ராமதாஸ் பதற்றமடைந்து, “நீங்கள் அமைச்சர் சீட்டில்தான் உட்கார வேண்டும்” என அன்புக் கட்டளையிட்டார். அமைச்சரின் இந்த எளிய மற்றும் கனிவான அணுகுமுறை அங்கிருந்தவர்களை திக்குமுக்காட வைத்தது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேகதாது அணைக்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் சுமுகமாக நடைபெற்றது.