மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் எழுப்பியுள்ள பரபரப்பான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை நேரில் சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த எத்தனை முறை கோரிக்கை விடுத்தார் என்று ரோஹித் பவார் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் மாநில சிஐடி (CID) அலுவலகத்திற்குத் தான் நேரில் சென்றபோது, அங்கு விசாரணை அதிகாரிகள் யாரும் பணியில் இருக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். இந்த மர்ம மரண வழக்கின் விசாரணையில் ஆளுங்கட்சி வேண்டுமென்றே அலட்சியம் காட்டுகிறதா என்ற
