Categories: சினிமா

நாடகக் கம்பெனியில் சிறுவனாக எம் ஜி ஆர் பட்ட கஷ்டங்கள்… பிரம்போடு அலையும் இந்த வாத்தியார் சொன்ன அந்த வார்த்தைதான் திருப்புமுனை!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.

அதே போல நாடக உலகிலும் அவர் பல இன்னல்களை சந்தித்துள்ளார். எம்ஜிஆர் ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கோபாலமேனன் இலங்கையில் இறந்து விடுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு அந்தக் குடும்பம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து, கேரளாவுக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர் அங்கும் இருக்க முடியாமல் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டனர்.

குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக சிறு வயதிலேயே எம் ஜி ஆர் நாடகக்குழுவில் சேர்த்துவிடப்பட்டார். அங்கு அவர் நல்லதங்காளின் ஏழாவது குழந்தையாக நடித்தார். அப்போது அவர் நன்றாக அழவேண்டும் என்பதற்காக அவருக்கு பயிற்சியளித்த காளி என் ரத்தினம், அவரை உண்மையாக பிரம்பால் அடிப்பாராம். வலி தாங்க முடியாமல் அழுவாராம் எம் ஜி ஆர். அதைப் போலவே நாடகத்திலும் அழுது அனைவரின் கைத்தட்டல்களையும் பெறுவாராம்.

நாடகம் முடிந்ததும் காளி என்.ரத்னம் ‘நீ சரியா நடிக்கலங்குறதுக்காகதான்டா உன்னை அடிச்சேன். இப்ப பாரு மக்கள் எல்லாம் உன்னைப் பாராட்டுறாங்க … இப்படி எல்லாம் கஷ்டப்பட்டா தான்டா பெரிய ஆளா ஆக முடியும்’னு சமாதானம் சொன்னாராம். அதைக் கேட்டதும் தன் நல்லதுக்காகதான் இப்படி செய்தார் என்பதை புரிந்துகொண்டு அதன் பின்னர் சிறப்பாக நடிக்க ஆரம்பித்தாராம்.

 

vinoth

Recent Posts

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

1 minute ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

7 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

15 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

21 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

28 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

1 மணத்தியாலம் ago