தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் நாகேஷ். அவருடைய அலட்டிக் கொள்ளாத முக பாவங்களும் ஆபாசம் இல்லாத காமெடி வரிகளும், உடல் அசைவுகளும் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை, அவரைப்போல் யாராலும் வர முடியாது என்று இன்று வரை நிரூபித்துள்ளது. அவரது ஏறு இறங்கும் குரல் ஜாலம், மாறும் உடல் மொழி, ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு அருமையான நடனம் மற்றும் கவலையை மறக்க செய்யும் சிரிப்புக்கு கேரண்டி தரும் நகைச்சுவை பேச்சு என்று ஆல்ரவுண்டராக வலம் வந்தவர். புரட்சித்தலைவரின் பல திரைப்படங்களில் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு புகழ் பெற மக்கள் திலகமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.
அப்போது நாகேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம். அதில் ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு நாகேஷை அழைத்துள்ளனர். அந்த நாடகத்திற்கு தலைமை தாங்க எம்ஜிஆர் வந்துள்ளார். நாடகத்தில் நாகேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் அட்டகாசமாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் வயிற்று வலி நோயாளி வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது அவரை இயக்குனர் மேடைக்கு போக சொல்ல, இருங்க சார் நான் ஒரு வயிற்று வலி நோயாளி மெதுவா தான் போக முடியும் என்று கூறி அப்பவே தனது காமெடியை தொடங்கி விட்டார்.
மேடையில் அவருக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை தாண்டி அவரே தனது பாணியில் பல வசனங்களை பேசியுள்ளார். மேடையில் நிஜ நோயாளியாகவே மாறி மாஸ் காட்டினார். எம்ஜிஆர் நாகேஷின் நடிப்பை பார்த்து வயிறு குலுங்க சிரித்தாராம். அங்கு வந்திருந்த மக்களும் நாகேஷின் காமெடிக்கு சிரித்துள்ளனர். நாடகம் முடிந்த பிறகு நாகேஷ் மேடைக்கு அழைத்து ஒரு கப்பை கொடுத்துள்ளார் எம்ஜிஆர். அதனை வாங்கிய நாகேஷ், எம்ஜிஆரை பார்த்து, அண்ணே எல்லாரும் முன்னாடியும் கப்ப கொடுத்துட்டீங்க அப்புறமா புடுங்கிக்க மாட்டீங்களே என்று கூறியுள்ளார்.
மேலும் நான் அவ்வளவு ஒன்னும் நடக்கல என்று நாகேஷ் சொல்ல அதை கேட்டதும் சிரித்துக் கொண்டே எம்ஜிஆர் நீதாம்பா உண்மையான காமெடியன் என்று மனதார வாழ்த்தி உள்ளார். பிறகு மேடையில் இருந்து இறங்கி வந்த நாகேஷ் அங்கிருந்த இயக்குனரிடம் இவர் யார் என்று கேட்க, அவர்தான் எம்ஜிஆர் என்று அவர் கூறியுள்ளார். எம்ஜிஆர் யார் என்று தெரியாமல் நாகேஷ் பரிசு வாங்கியுள்ளார். நாகேஷ் எம்ஜிஆருடன் 45 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…