எடப்பாடி முதலமைச்சரானால் கோவையில் மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படும்… வானதி சீனிவாசன் திட்டவட்டம்…!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்காததற்கு தமிழக அரசு தான் காரணம் என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2026 ஆம் வருடம் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பங்கேற்ற நிலையில் திமுக அரசு மத்திய அரசு மீது வீண்பழி சுமத்துகிறது.

மேலும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டதாக திமுக பரப்பி வரும் தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசியவர் 2026ல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்ததற்கு பின்பு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உறுதியாக கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார்.