சகல வசதிகளும் கிடைக்க விநாயகரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் – உங்களுக்கு தெரியுமா?

By Elango on மார்கழி 13, 2025

Spread the love

முதல் கடவுள் விநாயகர் வழிபாடு எப்போதுமே நமக்கு நன்மையை தான் தருகிறது. ஆனால் ஒவ்வொரு விதமான விநாயகருக்கும் ஒருவிதமான நன்மை அதிகமாக கிடைக்கிறது. விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபடும்போது அனைத்து வசதிகளும் கிடைக்கும். உப்பில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். குங்குமத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் சகலதோஷங்களும் விலகும். எருக்கம்பூவில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் தீமைகள் நீங்கும்.

சந்தனத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் குழந்தையின்மை நீங்கி குழந்தை பிறக்கும். பசுவின் சாணத்தால் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி சுப நிகழ்வுகள் நடைபெறும். வெண்ணையில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கும். வாழைப்பழத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் வம்சம் விருத்தி அடையும். இப்படி விநாயகரை வழிபடும் முறைகள் உள்ளன. இதை நீங்களும் பின்பற்றி விநாயக பெருமான் அருளை பெறலாம்.