மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் வாழ்வாதாரமும், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளின் நலனை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…
சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…
அதிமுகவில் தேர்தல் தோல்விக்குத் பிறகு வெடித்த உட்கட்சி மோதல், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அதிரடி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…