Categories: சினிமா

6 வருஷமா இவர எப்படி விட்டு வச்சாங்கன்னு தெரியல.. கதையை படிச்சதும் கண்ணீர் வந்திருச்சு.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி..!!

Spread the love

இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

படத்தின் சூட்டிங் முடிவடைந்ததால் இப்போது பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி கூறியதாவது, ஜெய் பீம் பாட இயக்குனர் ஞானவேல் என்னிடம் பிரேம்குமார் அற்புதமான ஒரு கதையை வைத்துக்கொண்டு உங்களை தொடர்பு கொள்ள தயங்குகிறார் என கூறினார்.

எனக்காக எழுதிய கதையை விட்டு விடக்கூடாது என நானே அவரை அழைத்து கதை கேட்டேன். 96 முடிச்சுட்டு 6 வருஷம் இந்த மனுஷன் படம் பண்ணல. எப்படி அவங்க பிரண்ட்ஸ் இவரை விட்டு வச்சாங்கன்னு தெரியல. ப்ரொடியூசர் தான் இவரை எப்படி விட்டு வச்சாங்கன்னு தெரியல. பிரேம்குமார் பணம், புகழ் பின்னாடி ஓடுற ஆள் கிடையாது அந்த கலைக்காகவும் எடுத்துகாகவும் மட்டுமே இருக்கிற ஒரு அபூர்வ சில மனிதர்கள் மாதிரி பொருட் காட்சியில் வைக்கிற பீஸ் இவரு.

இப்படி ஒரு ஆள் அழகான ஸ்கிரிப்ட் கொண்டு வந்து கொடுத்தாரு. அந்த ஸ்கிரிப்ட் படிச்சேன். புக்கை படிக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது. படித்து முடித்துவிட்டு அந்த புக்கை பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல. மனசுக்குள்ள அவ்வளவு உணர்ச்சிகளை கொண்டு வருது. அப்பா அம்மா கிராமத்தில் இருந்து வந்தவங்க. நான் சென்னையில் படிச்சேன். ஆனா ஹாலிடேஸ்க்கு கிராமத்தில் தான் இருந்தோம். இந்த புக் படிக்கும் போது இது தமிழ்நாடு, இதுதான் நாம அப்படிங்கிற உணர்வு வந்துட்டே இருந்துச்சு என கூறியுள்ளார்.

admin

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

39 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

53 minutes ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

1 மணத்தியாலம் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

2 மணத்தியாலங்கள் ago