Connect with us

CINEMA

எனக்கு அது தான் முக்கியம்.. இப்போ கூட பலர் என்னைத்தேடி.. இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த மீனா..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்  நடிகை மீனா, இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி  மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவரின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தோற்றினால் பாதிக்கப்பட்டு  காலமானார். இதைத்தொடர்ந்து மீனாவை, ஒரு கேள்வி மட்டும் துரத்துகிறது என்றும் ; அது பற்றி விளக்கமும் அளிக்கிறார்.

   

நடிகை மீனா சிறு வயதிலிருந்து  நடித்து தற்போது சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக  இருகிறார். 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை  உள்ளது. அந்த குழந்தையும் நடிகர் விஜயுடன் இணைந்து  “தெறி ” என்ற படத்தில் நடித்துள்ளார்.  நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் புறாக்கள் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த  வருடம் மரணம் அடைந்தார்.

அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் நடிகை மீனா தவித்து வந்துள்ளார். இதை அறிந்த மீனாவின் தோழிகள், வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பேசி பழைய நிலைக்கு வர பெரிது உதவி செய்தனர்.
மீனாவின் கணவர் இறந்ததும் அவரை துரத்திக் கொண்டே வருகிறது இந்த கேள்வி அதுதான் மறுமணம். இந்த கேள்வி குறித்து மீனா பேட்டியளித்த போது ;  என் கணவர் இறந்து ஒன்றரை வருடம் ஆகிறது, அந்த துக்கத்தில் இருந்தே என்னால் இன்னும் மீளமுடியவில்லை. அதற்குள் மறுமணம் பற்றி வதந்தி வருகிறது. அது எதுவும் உண்மை இல்லை என்றும் எனக்கு அதில் விருப்பமும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் எனக்கு தனது மகளான நைனிகா வாழ்கை மட்டும் தான் முக்கியம் என்றும் கூறினார். ஒரு ஆண் தனியாக இருந்தால் அவரை சுற்றி எந்த கேள்வியும் இந்த சமூகம் கேட்காது; ஆனால் ஒரு பெண் கணவனை இழந்து தனியாக இருந்தால் ஏன் அவரை மட்டும் கேள்வி எழுப்புகிறது இந்த சமூகம். இதுபோன்ற வேதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஏன் ஒரு பெண்ணால் தனியாக வாழ்ந்து கட்ட முடியாதா .? எத்தனையோ பேர் தனியாகவே வாழ்க்கையை வாழ்ந்து கழிக்கிறார்கள்.

இப்போதும்கூட என்னை மனதில் வைத்து திரைத்துறையில் படம் எடுக்க பலரும் வருகிறார்கள். இதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் திருமணம் பற்றி நினைக்கவும், பேசவும் விருப்பம் இல்லை என்று கூறினார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top