தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த 21 வயது ஷிரீஷா, ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு தனது அறையில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் ஆதாரங்களை வைத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அருகில் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த சனாவுல்லா கான் (34) என்பவரைக் காவல்துறையினர் 30 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஷிரீஷாவின் தோழி ஊருக்குச் சென்றதைப் பயன்படுத்திய சனாவுல்லா, ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து இக்கொடூரத்தைச் செய்துள்ளார். கைதான சனாவுல்லாவின் செல்போனைச் சோதித்தபோது அதில் 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், அப்பகுதி பெண்களை இரகசியமாக எடுத்த புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது. ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான இவன், ஷிரீஷாவின் மூக்கு மற்றும் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளான்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…