திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் நிலவிய ஊழலைத் தமிழக முதல்வர் விஜய் முழுமையாக அகற்றிவிட்டதாகப் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், மக்களின் பேராதரவோடு முதல்வர் விஜய் இன்னும் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தொடர்ந்து வழங்குவார் என்றும், அதற்கு அடுத்த பொதுத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகமே (தவெக) மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் அவர் ஜோசியம் தட்டியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தை ஏதோ ஒரு புதிய கட்சியாகப் பார்க்காமல், அதனையும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாகவே தான் பார்ப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.