சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கட்டி, கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட மறுநாளே இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரியுள்ள அம்பத்தூர் பகுதி மக்கள், குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரக் கண்காணிப்பையும் ரோந்துப் பணிகளையும் காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
