அதிமுகவில் நாளுக்கு நாள் அரசியல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு விலக முடிவெடுத்துள்ளது அக்கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் ஒரே சமயத்தில் இந்த அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளதால், இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விஜயபாஸ்கர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் பக்கபலமாக, துணையாக நிற்போம் என அவரது ஆதரவாளர்கள் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…
சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…