சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மறுமலர்ச்சி திாவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, ஆளும் திமுக அரசு மற்றும் அதன் அரசியல் நகர்வுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் அரசியல் பேரங்களைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று சாடிய அவர், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரை அதிமுகவிலிருந்து பேரம் பேசித் தன்பக்கம் இழுத்தது திமுகதான் என்று சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த காலங்களில் தங்களை திமுக நடத்திய விதம், மதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அவமரியாதையையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்ட வைகோ, “திமுகவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர்” என ஆவேசமாகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசைப் பற்றிக் குறிப்பிடுகையில் திமுகவின் இரட்டை நிலையை வைகோ வெளிச்சம்போட்டுக் காட்டினார். மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரம் கொண்ட, அண்ணா மற்றும் கலைஞர் காலத்திலிருந்தே திமுக எதிர்த்து வந்த 356-வது சட்டப்பிரிவை, தற்போதைய தவெக அரசைப் பலவீனப்படுத்தப் பயன்படுத்தலாம் என திமுகவினர் ஆளுநரிடம் மறைமுகமாகக் கோருவது அவர்களின் கொள்கை வீழ்ச்சியைக் காட்டுவதாக விவாதித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக ஆட்சி அமைக்க திமுகவே ஆதரவு தர முன்வந்ததன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாகக் சந்தேகம் கிளப்பிய வைகோ, இனிவரும் காலங்களில் எதிரணியில் இருந்து நடிகர் விஜய்யின் தவெக மீது தொடுக்கப்படும் அரசியல் தாக்குதல்களைத் தடுக்கும் கவசமாக மதிமுக செயல்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…