திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(40). இவர் கழிவுநீர் அகற்றும் லாரியில் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது(35) என்ற பெண்ணுக்கும் இளங்கோவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இளங்கோவன் அடிக்கடி மாதுவை தனது வீட்டில் கழித்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சமீபத்தில் மாது செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவனுடன் பேசி வந்தது இளங்கோவனுக்கு தெரியவந்தது. கடந்த 26-ஆம் தேதி இளங்கோவன் மாதுவை வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் செல்போனில் யாரிடம் பேசுகிறார் என கேட்டு தகராறு செய்தார்.
மேலும் கோபத்தில் குழவிக்கல்லால் மாதவன் முகத்தில் அடித்து விட்டு வெளியே சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கி கடந்த மாதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்m
