தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா, பிரியா மணி, வடிவுக்கரசி உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
ஆனால் அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது. நேற்று அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் வாழ்க்கையில் கொண்டு வந்த அதிர்ஷ்டம் பற்றி பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “எங்க அண்ணன் பாரதிராஜாவுக்கு மனோஜ் பிறந்த அடுத்த நாளில்தான் ‘பதினாறு வயதினிலே’ படத்தின் வாய்ப்புக் கிடைத்தது. மகனைப் பார்த்துவிட்டு வந்து பட வேலைகளைத் தொடங்கலாம் என ஊரில் இருந்த மனைவி மற்றும் மகனைப் பார்க்க எங்க அண்ணன் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்து சென்று வந்தார்.” எனக் கூறியுள்ளார்.
இப்படி பாரதிராஜாவின் வாழ்வில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்த செல்லக் குழந்தையாக இருந்துள்ளார் மனோஜ்.அதனால்தான் பாரதிராஜா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ என்று பெயர் வைத்தார் போல.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…