மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் உள்ள திரையரங்குகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் படி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் அவர்கள் இயக்கத்தில் பரவ பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிபர் பாபு சகீர் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மலையாளத்தில் பெரிதளவு ஓடியது.
ஆக்சன் மற்றும் திரில்லர் கதையான இப்படம், கொடைக்கானலுக்கு நண்பர்கள் கூடி ட்ரிப் போகும் பொழுது அங்கு நடக்கும் டிராமா காமெடி அனைத்தும் கலந்து ஒரு டிராப்பில் சிக்கிய நபரை காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதைகளாகும். இப்படத்தில் நடித்து இடம்பெற்ற சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, எஸ்.பொதுவால், லால் ஜூனியர், தீபக், பரம்போல் அபிராம், ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோரின் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
படம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மலையாளத்தில் வெளியாகி, முதலில் 90 லட்சம் என்ற பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று 2 கோடி அளவில் வந்து, பின்னர் தமிழ்நாட்டில் மிதமாக ஓட ஆரம்பித்து மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி பல கோடி வரை அள்ளியது. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையுமா என்று நினைத்தபடி, தற்போது 150 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெற்ற இப்படம் தாறுமாறு வரவேற்பை பெற்றது. இதுவரையும் தமிழ்நாட்டில் எந்த மலையாள படமும் செய்யாத சாதனை செய்திருப்பதால் ப்ளூ சட்டை மாறன் அவர்களை தமிழ்நாட்டில் இவ்வளவு கோடி வசூலா என்று தன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போத இப்படத்தின் ரெக்கார்டையே உடைத்து மாபெரும் சாதனையை முறியடித்துள்ளது. இதுவரையிலும் மலையாளத்தில் எந்த படமும் வாங்காத பாக்ஸ் ஆபிஸ் வசூலை இப்படம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட இந்திய அளவில் 115 கோடி வசூலை பெற்று, உலக அளவில் 176 கோடி வசூலை தட்டி தூக்கி மகத்தான சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பெறுமா? என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், கிட்டத்தட்ட 200 கோடியை தொட்டுள்ளது. இப்படம் இன்னமும் எதிர்பார்ப்பை மீறி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது, அதனால் கூடிய விரைவில் படம் 200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…