Categories: சினிமா

ஆஸ்கர் விருது வாங்குன படத்த சுட்டு எடுத்துட்டு அத திரும்பி ஆஸ்கருக்கே அனுப்புறதெல்லாம் வேற லெவல்… செம்ம தில்லுதான் மணி சாருக்கு!

Spread the love

கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த படம் என்று நாயகன் திரைப்படத்தைச் சொல்லலாம். அந்த படம் அவருக்கு இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த படம்தான் மணிரத்னம் சகாப்தத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியது என சொல்லலாம்.

அப்படி மணிரத்னம்- இளையராஜா- கமல்ஹாசன் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு மைல்கல் திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறைக்கு பிறகு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இந்த படத்தின் உருவாக்கத்தின் போது பல பிரச்சனைகளை படக்குழுவினர் சந்தித்துள்ளனர். படத்தின் கதை மும்பையைச் சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் பரவ, அவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, அவரை தேடி சென்றுள்ளனர். ஒருவழியாக அந்த பிரச்சனையை முடித்தால் படம் சென்சாரில் குற்றச் செயல்களை ஆதரிப்பதாக பிரச்சனை கிளம்பியுள்ளது.

ஆனால் இந்த படம் உண்மையில் 1972 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான தி காட்பாதர் என்ற படத்தின் திரைக்கதையைக் காப்பியடித்து உருவாகப்பட்ட படம்தான். படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு அப்படியே மார்லன் பிராண்டோவை பிரதியெடுத்தது போல இருக்கும்.

ஆனால் நாயகன் படத்தில் சில அடிப்படையான விஷயங்களை மணிரத்னம் மாற்றியிருந்தார். அதனால் அந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி சிறந்த வெளிநாட்டு படத்துக்கான இந்தியாவின் தேர்வாக ஆஸ்கர் விருதுக்கு இந்தபடத்தை அனுப்பியதுதான் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. ஏனென்றால் நாயகன் எந்த படத்தைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டதோ அந்த காட்பாதர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்ற படம் என்பதுதான் நகைமுரண்.

vinoth

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

13 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

17 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

23 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

26 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

30 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

35 minutes ago