சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் VJ மணிமேகலை. இந்த நிகழ்ச்சி மூலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட மணிமேகலை நான்கு சீசங்களில் கோமாளியாகவும் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ஐந்தாவது சீசனை இவர் தொகுத்து வழங்கி வந்தார். அப்போது போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இனிமேல் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர மாட்டேன் என்று கூறிவிட்டு அவர் வெளியேறியது சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பிரியங்காவுக்கு ஆதரவாகவும் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்தனர். இந்த சம்பவம் பல நாட்களுக்கு மேல் சோசியல் மீடியாவில் பெரும் பேசும் பொருளாக இருந்தது. இதனை தொடர்ந்து மணிமேகலை பல்வேறு விருது வழங்கும் நிகழ்ச்சியையும் youtube நிகழ்ச்சியையும் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கோபத்துடன் வெளியேறிய மணிமேகலை பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போகிறார் என்று கூறி வந்த நிலையில் அது எதுவும் நடக்கவில்லை. மரியாதை இல்லாத இடத்தில் வேலை செய்ய மாட்டேன் என்று அவர் கூறியிருந்ததால் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் இனி அவர் பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது.
இந்த நிலையில் வீஜே மணிமேகலை நேற்று சென்னையில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார். எங்கள் திருமணத்தின் முதல் நாளிலிருந்து எங்கள் பயணம் குறித்து நீங்கள் நன்றாக அறிவீர்கள், திருமணமான முதல் வருடத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகை செலுத்துவதில் தொடங்கிய சென்னையில் பிரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கும் வரை எங்களின் அனைத்து கணமும் நிறைவேறியுள்ளது.
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி எந்த ஆதாரமும் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது உண்மையில் எங்களை வலிமையாக்கியது. எப்போது இந்த வீடு எங்களுக்கு கையில் வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். அந்த நாள் இப்போது வந்து விட்டது. எங்களுடைய கடின உழைப்புக்கு கடவுள் இந்த நாளை எங்களுக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.