தமிழ் சினிமாவில் கவின் மற்றும் ஹரீஷ் கல்யாணத்துக்கு அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர்தான் நடிகர் மணிகண்டன். சினிமாவில் இவருடைய கதை தேர்வு என்பது நன்றாக இருப்பதால் அடுத்த கட்ட உயரத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். சில்லு கருப்பட்டி படத்தில் தொடங்கி ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ள மணிகண்டனின் ஹிட் லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன்.
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த திரைப்படத்தை ராஜேஸ்வர் காளி சாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். இவர்களைத் தவிர பாலாஜி சக்திவேல், குரு சோமசுந்தரம், ஜென்சன் திவாகர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
குடும்பங்கள் கொண்டாடக்கூடிய ஃபேமிலி என்டர்டைனர் திரைப்படம் ஆக குடும்பஸ்தன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகின்றது.
இந்நிலையில் திரைப்படம் முதல் நாளில் 1.4 கோடி வசூல் செய்திருந்த நிலையில் இரண்டாம் நாள் இந்த திரைப்படம் 2.8 கோடி வசூலித்து உலகளவில் இந்த திரைப்படம் 4.2 கோடி வசூல் செய்த் நிலையில் மூன்றாவது நாளான இன்று உலகளவில் ரூ. 6.2 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த தொடர் தோல்விகள், அக்கட்சியில் மிகப்பெரிய தலைமை மாற்றத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை…
தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது பாடலாகப் பாடுவதில் தவெக தலைமையிலான அரசுக்கு உடன்பாடு இல்லை என்று அமைச்சர்…
கேரளத் திரையுலகில் ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிமிக்ரி கலைஞராகவும், பின் தேசிய விருது பெற்ற நடிகராகவும் உயர்ந்தவர்…
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை போட்டியாளராகப் பங்கேற்ற நடிகை ஹரிதேஜா, அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான…
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது, அவருக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்திக்காக விராட் கோலி முதலில் தனது…
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தத் திரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் குருணால் பாண்டியா தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸின்…