“நாங்க அண்ணன் தம்பிங்க” அல்லரை சில்லறைங்க செஞ்ச வேலை இது… அந்தர் பல்டி அடித்த மாணிக்கம் தாகூர் எம்பி..!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

தனது ராஜினாமா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாணிக்கம் தாகூர், பாரதியாரின் “அச்சமில்லை” பாடலை பதிவிட்டது ஒரு சாதாரண ‘குட் மார்னிங்’ செய்தி தான் என்றும், இதனை பாஜகவின் ஐடி விங் திட்டமிட்டு தவறாகச் பரப்புவதாகவும் சாடினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும், இது அண்ணன்-தம்பிகளுக்கு இடையிலான சிறிய கருத்து வேறுபாடுதான் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், சீர்மரபினர் சமூகக் கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக ஆட்சியில் பங்கு என்ற விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். தமிழக முதல்வர் கூறுவது போல் “தமிழகத்திற்கு எதிரான டெல்லி” என்பதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருவதாகவும், வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.