மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், தன் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் 42 வயது நபர் ஒருவர் கோடாரியால் தனது ஆணுறுப்பைத் தானே வெட்டிக்கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கடுமையான ரத்தக்கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட அந்த நபர் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர் என்பது தெரியவந்துள்ளது. மனநலக் கோளாறு காரணமாகவே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து மேலும் பல கோணங்களில் விசாரணை நீடித்து வருகிறது.
