“தனியாக செல்லும் சிறுவர்கள் தான் டார்கெட்”… 5 கிலோமீட்டர் கடத்திச் சென்று 5 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்… வெளியான திடுக்கிடும் பின்னணி…!

By Nanthini on மாசி 3, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில், தனியாகச் செல்லும் சிறுவர்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குளச்சல் அருகே உள்ள திங்கள் சந்தையைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், இரவு டியூஷன் முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ஒரு மர்ம நபர் நைசாகப் பேசி அவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டமில்லாத கடற்கரை பகுதிக்குக் கடத்திச் செல்லப்பட்ட அந்தச் சிறுவன், அங்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுவன் அந்த நபரின் பிடியிலிருந்து தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறினான். இதனைத் தொடர்ந்து, பெற்றோர் அளித்த துணிச்சலான புகாரின் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் அடையாளம் காணப்பட்டது. அதன் மூலம், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான அருள் ஆன்றோ சஜின் என்பவரைப் போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

   

விசாரணையில், கைதான அருள் ஆன்றோ சஜின் இதுபோன்று ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்ப்புத் தெரிவித்த சிறுவர்களைக் கழுத்தை நெரித்துக் கொலை மிரட்டல் விடுத்தும் அவர் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இவர் மீது ஏற்கனவே கோட்டார் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் வழிப்பறி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அருள் ஆன்றோ சஜின் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார். பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி புகாரளிக்கத் தயங்கிய பல பெற்றோர்களுக்கு மத்தியில், இந்தச் சிறுவனின் பெற்றோர் காட்டிய தைரியம் ஒரு தொடர் குற்றவாளியைக் கூண்டில் ஏற்ற உதவியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தனியாகச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.