மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஷேக்ரைஸ் (42) என்பவர் வசித்து வரும் நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வந்த பாக்கியஸ்ரீ என்ற 35 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அடிக்கடி இவர் அந்த பெண்ணிடம் தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்வதற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாக்கியஸ்ரீ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடும் கோபத்தில் இருந்த ஷேக் நேற்று இரவு அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரிடம் மீண்டும் மதமாற சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதை பாக்கியஸ்ரீ ஏற்றுக்கொள்ளாததால் அவரது தலை முடியை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சரமாரியாக வயிற்றில் சுத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷேக் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
