பெங்களூர் மெட்ரோ ரயில்களில் உணவு சாப்பிட கூடாது. புகை பிடிக்கக் கூடாது. கேமராவில் படம் எடுக்கக்கூடாது. மொபைலில் சத்தம் அதிகமாக வைத்து உபயோகிக்க கூடாது பிச்சை எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளது. இந்த நிலையில் யஸ்வந்தபுரத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்தா ஒரு நபர் ரயில் புறப்பட்டதும் பயணிகளிடம் பிச்சை கேட்டு யாசகம் பெற்றார். அவர் பயணிகளிடம் கொடுத்த சீட்டில் நான் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி.
எனக்கு உதவி செய்யுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இதனை பார்த்ததும் சில பயணிகள் அவருக்கு பணம் கொடுத்தனர். இதனை அறிந்த மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் அந்த நபரை பிடித்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை ஒரு பயணி செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். 10 முதல் 90 ரூபாய் வரை கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நபர் ரயிலுக்குள் சென்று எப்படி பிச்சை எடுத்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…