அண்ணி மீது அடங்காத ஆத்திரம்… வீடு புகுந்த கொழுந்தன்கள்… கதறி அழுதும் விடாமல் தலையை துண்டித்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

Spread the love

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கு கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடைய மனைவி தமிழரசி (35). இந்த தம்பதியினருக்கு ஹரிகிருஷ்ணன் (13), ஹரி சக்தி (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் சென்னைக்குச் சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்துள்ளார். தமிழரசி தன்னுடைய குழந்தைகளுடன் கணவர் தம்பிகளான பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழரசி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமுறைவாக இருந்த பாலகிருஷ்ணன் முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு வெளியே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முருகானந்தமும் விடுதலையாகியுள்ளார். இருவரும் காவல் நிலையத்திற்கு செல்ல காரணமாக இருந்த அண்ணி மீது கோபத்தில் இருந்து உள்ளனர்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று மாலை போதையில் வீட்டுக்குச் சென்று தமிழரசி இடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் பாலகிருஷ்ணன் அறிவாலை எடுத்து தமிழரசி கழுத்தை அறுத்து தலையை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். முருகானந்தம் மட்டும் வீட்டிலேயே இருந்துள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் வீட்டில் இருந்த முருகானந்தத்தை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய பாலகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

5 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

15 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

20 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

25 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

30 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

1 மணத்தியாலம் ago