தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தற்போது சிங்கத் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஆர்.வி.பரதன் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சிங்கத் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பரதன், தங்களுக்கு மண்ணச்சநல்லூர் அல்லது ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எதிர்வரும் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடப் போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
