மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) தொடர்பான புதிய விதிகளை ஓய்வூதியதாரர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள பணியாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருந்தால், அவர்கள் பெறும் மொத்த பணிக்கொடைத் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் பொதுத்துறை நிறுவனம் அல்லது மாநில அரசில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாறினால், இரு இடங்களிலும் சேர்த்துப் பெறும் ஒட்டுமொத்தத் தொகையானது, அவர் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் அளவைத் தாண்டக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று சிவில் பணிகளில் இணைந்தவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து பெரிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ராணுவப் பணிக்காக ஏற்கனவே கிராஜுயிட்டி பெற்றிருந்தாலும், சிவில் பணிக்கான தொகையைக் கணக்கிடும்போது முந்தைய தொகை தடையாக இருக்காது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அதே சமயம், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் அதே துறையில் மறுவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குத் தனியாகப் பணிக்கொடை வழங்கப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், தொண்டர் ஒருவர் தனது மகளின்…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தில், ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது கணவரையே மனைவியே கொலை செய்த…
சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…