பஸ்ல எனக்கு ஒரு சம்பவம் நடந்துச்சு.. அதனால 3 வருஷம் பஸ்ல போறதையே நிறுத்திட்டேன்.. ஓபனாக பேசிய மகாராஜா பட நடிகை..!!

By admin on ஆனி 21, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதி நித்திலன் இயக்கத்தில் உருவான மகாராஜா படத்தில் நடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஜா படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடிகை சஞ்சனா நடித்துள்ளார்.

Maharaja Movie Day 4 Box Office Collection : தொடரும் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மகாராஜா... 4 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

   

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பெண்களுக்கு சில கசப்பான அனுபவங்கள் இருக்கும் உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்திருக்கிறதா என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த சஞ்சனா நான் பேருந்தில் கூட இப்படி ஒரு கசப்பான அனுபவத்தை சந்தித்தேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது பேருந்தில் சென்றேன்.. அப்போது எனக்கு ஒரு சம்பவம் நடந்தது.

   

மகாராஜா படத்தில் நடித்த ஜோதி சீரியல்களில் நடித்துள்ளாரா?

 

அதிலிருந்து பேருந்தில் செல்வதற்கு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. சுமார் மூன்று வருடங்கள் நான் பேருந்தில் பயணிக்கவில்லை. வீட்டில் இருந்து வாகனத்தை எடுத்துக்கொண்டு தான் கல்லூரிக்கு சென்று வந்தேன். மகாராஜா படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நானே என்னை தயார் படுத்திக் கொண்டேன். சொல்லப்போனால் மகாராஜா படத்தில் நடிப்பதற்காக தான் நான் வெளியவே வந்தேன். அதுவரை எனக்குள் பயம் இருந்தது.

ரொம்ப கேவலமா ட்ரீட் பண்ணாங்க ...

வாழ்க்கையில் இந்த அனுபவங்களை எல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும் என என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு தான் தைரியமாக பேருந்துகளில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். நம்மால் ஏன் தைரியமாக இருக்க முடியாது ஏன் இதை சமாளிக்க முடியாது என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். பேருந்தில் நடந்த கசப்பான அனுபவத்திலிருந்து நான் மகாராஜா படத்திற்காக தான் வெளியே வந்தேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.