குடும்பத் தலைவிகளே… மகளிர் உரிமைத் தொகைக்கு அப்ளை பண்ணிட்டீங்களா?.. வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்…?

By Nanthini on ஆடி 29, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தற்போது விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 15 முதல் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேர்வு செய்யப்படும் மகளிருக்கு செப்டம்பர் முதல் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே முகாமுக்குச் சென்று விண்ணப்பித்து விடுங்கள்.