இந்நிலையில் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தகுதிகளுக்கான சில விதிகளை அரசு தளர்த்தியுள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் இருந்து முதியோர் ஓய்வூதியம் பெரும் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத, தகுதியுள்ள மற்ற பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு திட்டத்தின் கீழ் மானியம் பெற்று அதன் மூலமாக நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், மற்ற தகுதிகளை பூர்த்தி செய்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
அதே சமயம் சில பயனாளிகளுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் சரியாக இணைக்கப்படாதது, வங்கி கணக்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால் உரிமைத்தொகை சரியாக வந்து சேராமல் இருக்கலாம். இந்த சிக்கலை கண்டறிந்து சரி செய்ய அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் மட்டும் அனுப்பி அந்த பணம் சரியாக சென்றுள்ளதா என சோதிக்கப்படும்.
இதன் மூலம் எந்தெந்த வங்கி கணக்குகளில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே உங்களுடைய வங்கி கணக்குக்கு திடீரென்று ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டால் அது இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…