Categories: CINEMA

என் மனைவி இறந்தப்ப நிகழ்ந்த சம்பவம்.. அதை பார்த்து மனச தேத்திக்கிட்டேன்.. மதுரை முத்து எமோஷனல் பேட்டி..!

ஸ்டாண்ட் அப் காமெடியனான மதுரை முத்து தனது மனைவி இறந்தபோது நடந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலக்கி வருபவர் மதுரை முத்து. பல வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்த போதும் அதனை ஏற்காமல் தொடர்ந்து சின்ன திரையில் மட்டுமே பயணித்து வருகிறார். ஸ்டாண்ட் காமெடி செய்வதில் கில்லாடியான இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்திருக்கின்றார்.

நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து வரும் மதுரை முத்துவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. இவர் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் இரண்டு பெண் குழந்தை பெற்றெடுத்தார். தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னை திரும்பி கொண்டு இருந்தபோது அவரது மனைவி லேகா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தனது கண் முன்னே மனைவி உயிர் இல்லாததை எண்ணி மிகவும் வருத்தத்தில் இருந்த மதுரை முத்து இரண்டாவது திருமணம் வேண்டவே வேண்டாம் என்று இருந்தார். பின்னர் தனது குழந்தைகளுக்காக  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்த லேகாவின் நெருங்கிய தோழியான நீத்து என்கின்ற பல் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு மகள், மகன் மனைவி என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் மதுரை முத்து அண்மையில் பிரமாண்டமாக வீடு ஒன்றைக் கட்டி இருந்தார். அதில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் மதுரை முத்து சமீபத்தில் பேட்டி ஒன்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

அதில் அவரது முதல் மனைவி இறப்பு குறித்து கூறியிருந்தார். தனக்கு விருப்பமானவர்கள் யாரும் தன்னுடன் நீண்ட காலம் பயணிக்க மாட்டார்கள். எனக்கு தாய் இல்லை, தந்தை இல்லை, மனைவி இல்லை என வருத்தமாக பேசி இருந்த மதுரை முத்து எனது மனைவி இறந்தபோது சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு மிகப்பெரிய ஆக்சிடென்ட் நடந்தது. அதில் அப்பா அம்மா இருவரும் தவறிவிட்டார்கள். ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் பிழைத்தது.

இதை பார்த்த நான் என் குழந்தைகளுக்காவது அப்பா என நான் இருக்கின்றேன். அந்த குழந்தைக்கு அப்பா அம்மா இருவருமே இல்லை என்று எண்ணி மனசை தேற்றிக்கொண்டேன். நம் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் வளர்த்தேன். மேலும் எனது மனைவியிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வரதட்சணையாக பெற்றது கிடையாது. இரண்டாவதாக தற்போது திருமணம் செய்து கொண்டிருந்த மனைவியிடம் இருந்தும் நான் வரதட்சணை வாங்கியது இல்லை என்று பெருமையாக பேசி இருந்தார். அனைத்தும் எனது உழைப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணி வாழ்பவன் நான் என கூறியிருந்தார்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

4 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

5 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

5 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

5 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

6 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

6 மணி நேரங்கள் ago