நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு: “2 வாரம் தான் டைம்” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

By Soundarya on ஆடி 7, 2025

Spread the love

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்து.

சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்க கோரியும் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் ஆவணப்படத்தின் மூலமாக ஈட்டிய லாப கணக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.