மழையால் ஏற்பட்ட மின்சார துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று 16 மாணவர்கள் மேல் முறையீடு செய்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறுத்தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
