தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் உள்ளிட்டோ நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதகஜராஜா. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 வருடங்கள் கழித்து படம் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது.
\இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்துடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். 12 வருடங்களுக்குப் பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் பேரதரவை பெற்று வருகிறது. விஷாலின் மதகஜராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓப்பனிங் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த பொங்கல் வின்னரே மதகஜராஜா திரைப்படம் தான் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து அவரை தீவிர நோயாளியாக சித்தரித்த நிலையில் தனக்கு இருந்தது வெறும் வைரல் காய்ச்சல் மட்டும் தான் என்றும் தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் மீண்டு வந்து விஷால் பதிலடி கொடுத்திருந்தார்.
இரண்டு மணி நேரம் படம் போறதே தெரியவில்லை லாஜிக் இல்லை என்றாலும் காசு கொடுத்து படத்துக்கு போகும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவதே சிறப்பான விஷயம் என படத்தை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்க முதல் நாள் 3.2 கோடி வசூல் செய்த இந்தப்படம் உலகளவில் 12 நாட்களில் 40.92 கோடியை வசூலித்துள்ளது. மேலும், வார விடுமுறை தினம் வருவதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுக்கு பின் வெளியான ஒரு படம் வசூலை அள்ளுவது இதுவே முதன்முறைய ஆகும்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…