திருச்சி மாநகரம் வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேஸ்வரன் (37) மற்றும் உமாசங்கர் (33) இருவரும் சகோதரர்கள். இதில் அழகேஸ்வரன் அரிசி கடை நடத்திவரும் நிலையில் உமாசங்கர் சென்னையில் பணியாற்றி வருகின்றார். இதனிடையே நேற்று நள்ளிரவு உமாசங்கர் மற்றும் அழகேஸ்வரர் இருவரும் வரகனேரி பெரியார் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அழகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளைக்கான காரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
