BREAKING: அண்ணாமலைக்குப் பின் டெல்லியில் ஒலிக்கும் தமிழரின் குரல்…. தேசிய பாஜகவில் களமிறங்கிய ம.வெங்கடேசன்…. நிதின் நபின் அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ம. வெங்கடேசன் உட்பட 16 பேர் தேசியச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகவும், தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பொறுப்பு, கட்சி அமைப்பில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.