முதலில் நடிக்க தான் வந்தேன்…. ஆனா பாடலாசிரியராக காரணம் இதுதான்…. தேவ் சூர்யா ஓபன் டாக்…!!

By Devi Ramu on புரட்டாதி 13, 2025

Spread the love

இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் இந்திரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்தர், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் தேவ் சூரியா பாடலாசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தேவ் சூர்யா கூறியதாவது, இந்திரா திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனேன். 2018-ஆம் ஆண்டு ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தேன்.

ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. நான் அங்கம் வகித்த முதல் படம் இந்திரா. தமிழ் மொழி மீது இருக்கும் பற்று காரணமாக பாடல் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். என் பாட்டி மூலமாகத்தான் தமிழ் மொழி மீது எனக்கு விருப்பம் வந்தது. எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது எனக் கூறியுள்ளார்.