பெற்றோர்களே… இனி குழந்தைக்கு ஆதார் அட்டை எடுக்க இது கட்டாயம்… UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளதால் பிறந்த குழந்தை முதல் அனைவருமே ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியமாகும். தற்போது பிறந்த குழந்தைக்கு கூட பால் ஆதார் கார்டு எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் 5 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் அட்டை பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று UIDAI அறிவித்துள்ளது. முன்னதாக பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் ஒரு ஆதார், பெற்றோரின் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரு ஆதார் என 2 ஆதார் அட்டைகள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் பிறப்புச் சான்றிதழ் தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த மூன்று மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.