Categories: சினிமா

என் முதல் பாட்ட இளையராஜா பாடப் போறாரா?.. புல்லரித்துப் போய் நின்ற சினேகனுக்கு கிடைத்த ஷாக்.. அப்போது அரவணைத்த ஒரு கை!

Spread the love

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன்.

அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கவிஞர் சினேகன் பிரபல நடிகையான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின்  திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து வாழ்த்து கூறினர்.

பாடலாசிரியர் சினேகனுக்கு தமிழ் சினிமாவில் மிகவும் நெருங்கிய நண்பராக இருப்பவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கும் எல்லா படங்களிலும் சினெகன் ஒரு பாடலாவது எழுதிவிடுவார். அந்த அளவுக்கு மௌனம் பேசியதே படத்தில் இருந்தே இருவரின் நட்பும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சினேகன் தான் எவ்வாறு இயக்குனர் அமீரை முதல் முதலாக ஒரு வித்தியாசமான சூழலில் சந்தித்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “நான் வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்த போது இயக்குனர் பாலாவின் இரண்டாவது படமான நந்தாவில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. எழுதிக் கொடுத்தேன். அந்த பாடலை இளையராஜா பாடப்போவதாகவும் சொன்னார்கள். எனக்கோ புல்லரித்து விட்டது. ஒரு பாடலாசிரியரின் முதல் பாட்டுக்கு இதைவிட வேறு என்ன கௌரவம் கிடைத்துவிட முடியும்.

ஆசையாக பாலாவின் அலுவலகத்துக்கு ஒரு நாள் சென்றேன் பாடலைக் கேட்கலாம் என. அப்போது அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த அமீர், என்னை சாலையோர டீக்கடை ஒன்றுக்கு அழைத்து சென்று ‘நீங்கள் எழுதிய பாடல் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் சூழலுக்கு அது பொருந்தாது என்பதால் அந்த பாடலை நீக்கிவிட்டோம்.” எனக் கூறினார். நான் கண்கலங்காத குறையாக நின்றேன். அப்போது அமீர் என்னை ஆறுதல் படுத்தும் விதமாக “நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் என்றைக்கு இயக்குனர் ஆனாலும் என் படத்தில் நீங்கள் பாட்டு எழுதுவீர்கள் என்று கூறினார்.

இது சினிமாவில் எல்லோரும் சொல்வதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த ஆண்டு ஒரு படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது. இயக்குனரின் அலுவலகம் சென்றேன். அங்கே அமீர் சிரிப்போது என்னை வரவேற்றார். சொன்ன வாக்கைக் காப்பாற்றினார்” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago